16 வயதுக்கு குறைவான குழந்தைகளின் சமூக வலைத்தள பாவனைக்கு தடை விதித்த அவுஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு சமூக வலைதளம் தடை – உலகில் முதல் நாடாக பதிவானது
ஆஸ்திரேலியா, 16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் எந்தவொரு சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை அமல்படுத்திய முதல் நாடாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. புதிய சட்டம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்ததால், TikTok, YouTube (Alphabet), Instagram மற்றும் Facebook (Meta) உள்ளிட்ட முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு அணுகல் குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டம் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உயர்த்தவும், அவர்களைத் தவறான உள்ளடக்கங்கள், அடிமைத்தனமான பயன்பாடு, இணையதள தொல்லைகள் போன்ற அபாயங்களிலிருந்து காக்கவும் அமல்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், சமூக வலைதள நிறுவனங்கள் பயனர்களின் வயதை உறுதிப்படுத்தும் கடுமையான முறைகளை பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு கடும் அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிற நாடுகளும் இது போன்ற ஆன்லைன் பாதுகாப்பு சட்டங்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளன.
What's Your Reaction?



