???? அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சுனாமிவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்இடம்பெற்ற களியாட்ட / விருந்துபசார நிகழ்வின் போதுமேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (27) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துகிடைத்த விபரங்கள் வருமாறு:அம்பலாங்கொடை – சுனாமிவத்தை பகுதியில் உள்ளவீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போது,அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர்,அங்கிருந்த நபர் ஒருவர் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிபலத்த காயமடைந்த நபர்,சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கலபொட பிரதேசத்தைச் சேர்ந்த28 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை.???? இக்குற்றச்செயலுக்குபிஸ்டல்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கிபயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனபொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கானமேலதிக விசாரணைகளைஅம்பலாங்கொடை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



