பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை பொதி ஹட்டன் நகரில்
3600 கிலோ கழிவு தேயிலை யுடன் பாரவூர்தி இருவர் ஹட்டனில் கைது . இச் சம்பவம் இன்று மதியம் 12.30 ஹட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது
.
பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை பொதி 60 கிலோ எடை கொண்ட 60 பொதிகள் அடங்கிய 3600 கழிவு தேயிலை தூள் ஹட்டன் பொலிசார் கைபற்றி உள்ளனர்.
இக் கழிவு தேயிலை ஹெம்மாத்த கம பகுதியில் இருந்து ஹட்டன் நகருக்கு கொண்டு வரும் வேளையில் ஹட்டன் பொலிசார் கைபற்றி உள்ளனர்.
தற்போது இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கழிவு தேயிலை தூள் 3600 கிலோ 60 கிலோ எடை கொண்ட 60 பொதி பாரவூர்தி ஆகியன ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்க பட்டு விசாரணை இடம் பெற்று வருகின்றன.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.
What's Your Reaction?






