ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உரைத் தொடர் ரத்து: நாமல் ராஜபக்ச அறிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஆக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த தனது உரைத் தொடர் ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களின் தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தள பதிவில் அவர், தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுடன் கூட நேருக்கு நேர் கலந்துரையாடத் தயார் இருந்ததாகவும், வேறுபட்ட சிந்தனைகள் மோதும் திறந்த உரையாடல்களிலேயே உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அழைப்பை வழங்கிய இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் தடையின்றி இத்தகைய அறிவுசார் கலந்துரையாடலில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை
What's Your Reaction?



