எரிபொருள் குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது!
எரிபொருள் விநியோகம் குறித்து உத்தரவாதம் இல்லை – புபுது ஜாகொட எச்சரிக்கை
தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியான உத்தரவாதம் வழங்க முடியாது என, நாட்டிற்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள் அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளரும் முக்கிய உறுப்பினருமான Pubudu Jayagoda தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ள மூன்று நிறுவனங்களும், தற்போதைய சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு விநியோகத்தை உறுதி செய்ய முடியாது என அரசுக்கு அறிவித்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சீனா எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால் Sinopec நிறுவனத்தின் விநியோகம் தொடர்பிலும் உறுதி அளிக்க முடியாது என அவர் கூறினார்.
அதேவேளை, இந்தியாவும் எரிபொருள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி உருவாகக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றும், இது தற்போதைய எரிபொருள் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
What's Your Reaction?



