புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு ரூ.15,000 அபராதம்

SaiSai
Jul 14, 2026 - 06:50
 0  23
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு ரூ.15,000 அபராதம்

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு ரூ.15,000 அபராதம்

முல்லைத்தீவு | ஜூலை 13

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் ரூ.15,000 அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

வர்த்தகர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மிளகாய்த்தூள் மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் அவை கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், குறித்த பொருட்கள் நீர்கொழும்பிலிருந்து அனுமதியின்றி மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட வியாபாரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு ரூ.15,000 அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

வெளிமாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வியாபாரிகளும் பொதுமக்களும் பொருட்களின் தரம், தேவையான அனுமதிகள் மற்றும் உற்பத்தி நிலையத்தின் சட்டபூர்வ ஆவணங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow