டெங்கு மரணங்கள் 35 ஆக உயர்வு!
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய (01) தினத்தில் மட்டும் 1,025 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக உயர்ந்துள்ளது.
What's Your Reaction?



