இலங்கையில் அதிகரிக்கும் கர்ப்ப காலத்தில் நீரிழிவுக்கு உள்ளாகும் தாய்மார்கள் தொகை
இலங்கையில் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes) உள்ளாகும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் தொடர்பான விசேட மருத்துவருமான மருத்துவர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கர்ப்பமடைவதற்கு முன்பே உடல் நிறை அதிகமாக இருத்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கியான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
What's Your Reaction?



