நாடு முழுவதும் 31,218 வீடுகள் – 2026 தேசிய வீட்டுத் திட்டம் சாவகச்சேரியில் ஆரம்பம்!
நாடு முழுவதும் 31,218 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2026 தேசிய வீட்டுத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஆரம்பம்
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் எமது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும்.
யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அந்த மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்குமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
- ஜனாதிபதி -
இன்று (16) சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகோண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
What's Your Reaction?



