டிக் டொக்கில் பழகியவரை நம்பி ஹோட்டல் அறைக்கு சந்திக்க சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

SaiSai
Jan 23, 2026 - 18:42
 0  83
டிக் டொக்கில் பழகியவரை நம்பி ஹோட்டல் அறைக்கு சந்திக்க சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட நெருங்கிய உறவில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் பெருந்தொகை பணம், நகைகளை இழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய, பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்த நண்பர், கடந்த 19 ஆம் திகதி இரவு, பொரலஸ்கமுவ, கட்டுவாவலவில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னை சந்தித்ததாகவும்,தன்னை ஒரு வகையான வாசனை திரவியத்தை சுவாசிக்க செய்து மயக்கமடைய செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறுநாள் கண் விழித்தெழுந்தபோது, தான் அணிந்திருந்த மூன்றரை பவுண் தங்க நகைகள், வங்கி அட்டை மற்றும் 258,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டை, படுஹேன பகுதியில் வசிக்கும் முன்னணி தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow