குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
✅????*_குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்_*..!
????️ *_On, June 04, 2026_*
???? *_News Editor_*
குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்துக்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்தார்.
நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலைமை குறித்து குவைத் அரசாங்க நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து,
குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது
What's Your Reaction?



