1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க ஆலியா என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த பரிதாபகரமான சம்பவம் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் நீர் நிலைகளுக்கு அண்மையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த துயரச் சம்பவம் வலியுறுத்துகிறது.
What's Your Reaction?



