சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐந்து நபர்கள் உயிரிழப்பு – பெண்ணொருவர் கைது

SaiSai
Jan 6, 2026 - 16:24
 0  13
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐந்து நபர்கள் உயிரிழப்பு – பெண்ணொருவர் கைது

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் அருந்தியதன் விளைவாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow